உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடசே பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா நிறைவு..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா கடந்த 26 ம் தேதி துவங்கிய நிலையில் விழாவின் இறுதி நாள் நிகழ்வாக நேற்று சதுஸ்த்தான அர்ச்சனம் ஹோமமும், மகாபூர்ணாஹுதி, திருமஞ்சனம், மஹாநிவேதனம், கோஷ்டி நிகழ்ச்சியும் நடைபெற்றது.



திருப்பூர்: உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழாவில் கலந்து கொண்டால் தீர்க்காயுள், சந்ததிகள், செல்வம், புகழ், தேக ஆரோக்கியம் கிடைப்பதுடன் வாழ்க்கையில் உண்டாகும் துக்கங்கள், சத்துருக்களால் ஏற்படும் பயம் மற்றும் வியாதிகள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பதால் கடந்த 4 நாட்களாக ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா கடந்த 26 ம் தேதி துவங்கிய நிலையில் விழாவின் இறுதி நாள் நிகழ்வாக நேற்று சதுஸ்த்தான அர்ச்சனம் ஹோமமும், மகாபூர்ணாஹுதி, திருமஞ்சனம், மஹாநிவேதனம், கோஷ்டி நிகழ்ச்சியும் நடைபெற்றது.



விழாவையொட்டி வெங்கடேசப் பெருமாள், ஆண்டாள், பத்மாவதி தாயார், லட்சுமிஹயக்ரிவர், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி, விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.



மேலும் பக்தி இன்னிசை நிகழ்வில் பெண்கள் கும்மியாட்டத்தில் ஆடி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இந்த விழாவானது வைணவ ஆலயங்களில் செய்யப்பட வேண்டிய நித்திய பூஜைகள், நைவேத்தியங்கள், வழிபாட்டு முறைகளில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் தவறுதலாக உண்டாகும் தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறுவதற்கு நடத்தப்பட்டது.



இதில் கலந்து கொண்டால் தீர்க்காயுள், சந்ததிகள், செல்வம், புகழ், தேக ஆரோக்கியம் கிடைப்பதுடன் வாழ்க்கையில் உண்டாகும் துக்கங்கள், சத்துருக்களால் ஏற்படும் பயம் மற்றும் வியாதிகள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பதால் கடந்த 4 நாட்களாக ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...