சமுதாயத்தை பிளவுபடுத்தும் சக்திகளை நாம் புறக்கணிக்க வேண்டும்..! - பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் பேட்டி

மத உணர்வுகளை தூண்டி சமுதாயத்தை பிளவுபடுத்தும் சக்திகளை நாம் புறக்கணிக்க வேண்டும் என கோவை துடியலூரில் நடைபெற்ற அனைத்து சமூதாய பிரார்த்தனைக் கூட்டத்தில் பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.



கோவை: அவரவர் மதத்தினுடைய கோட்பாடுகளை, கொள்கைகளை கோவில்களிலோ தேவாலயங்களிலோ, மசூதிகளிலோ பேசலாம் பொது இடங்களில் அவற்றைப் பேசும் போது தவறான புரிதலை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது என்று வேலூர் இப்ராஹிம் கூறினார்.

கோவை துடியலூர் உள்ள புதிய வாழ்வு நகர தேவாலயத்தில் அனைத்து சமுதாயத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பிரார்த்தனை நிகழ்வு நடந்தது.



இதில் தேவாலயத்தின் போதகர் இமானுவேல் ஜேக்கப், மலுமிச்சம்பட்டி நாகசக்தி தியான பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள், பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அதில் இந்தியா புதிய வல்லரசாக உருவெடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மத உணர்வுகளைத் தூண்டி பாரதத்தை பிரித்தாளும் பணிகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதை மக்கள் புரிந்து கொண்டு புறக்கணிக்க வேண்டும். எல்லா மதத்தினரும் தங்களுடைய புனிதமான வார்த்தைகளை போராட்டங்களுக்கு பயன்படுத்துவதால் அவர்களை எதிர்மறை கருத்து கொண்டவர்களாக பொதுமக்கள் நினைக்கும் சூழல் உருவாகிறது. ஆகவே அவரவர் மதத்தினுடைய கோட்பாடுகளை, கொள்கைகளை கோவில்களிலோ தேவாலயங்களிலோ, மசூதிகளிலோ பேசலாம் பொது இடங்களில் அவற்றைப் பேசும் போது தவறான புரிதலை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது.

இதனை அனைத்து மதத்தினரும் தவிர்க்க வேண்டும். சகோதரத்துவம், அன்பு, விட்டுக்கொடுத்தல், ஒருமைப்பாடு போன்றவற்றை தான் அனைத்து மதங்களும் நமக்கு கற்பிக்கின்றன. மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவரவர் மதங்களின் செயல்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து கோவை மாவட்டத்தில் மழை பெய்யவும், வறட்சி நீங்கவும் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.



இதில் விஸ்வகர்மா சங்க உறுப்பினர்கள் மற்றும் தேவாலயத்தை சார்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...