தாய்மார்களின் சகோதரனாக பிரதமர் மோடி மானியத்தை உயர்த்தி கேஸ் விலையை குறைத்துள்ளார் - வானதி சீனிவாசன் பெருமிதம்!

கோவை தெப்பக்குளம் மைதானத்தில் நடைபெற்ற ரக்‌ஷா பந்தன் விழாவில் பங்கேற்ற பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 லட்சம் மக்கள் பயனடைந்து உள்ளதாக தெரிவித்தார்.


கோவை: தாய்மார்களின் சகோதரனாக மானியத்தை உயர்த்தி கேஸ் விலையை பிரதமர் மோடி குறைத்துள்ளார் என பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



கோவை பூ மார்க்கெட் அருகில் உள்ள தெப்பக்குளம் மைதானத்தில் முன் களப் பணியாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாடினார்.



பின்னர் முன் கள பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத் திட்ட உதவிகள் மற்றும் ரக்ஷா பந்தன் கயிறு கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த விழாவில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பேசியதாவது,



ரக்ஷா பந்தன் மற்றும் ஓணம் பண்டிகையை ஒட்டி இந்திய நாட்டு சகோதரிகள் நலம் பெறும் வகையில் ஒரு சகோதரனாக சமையல் கேஸ் விலையை குறித்து மானியத்தை அதிகப்படுத்தி உள்ளார். ஒரு சகோதரனாக, சகோதரிக்கு அண்ணன் செய்வதை போன்று நாட்டு மக்களுக்கு மோடி மானியத்தை குறைத்து உள்ளார்.

நாட்டிலேயே 75 லட்சம் மக்கள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனடைந்து இருக்கிறார்கள். இது வரவேறக் கூடிய ஒன்று நாட்டு மக்கள் சகோதரிகள் இதனால் நலம் பெற உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...