தாராபுரத்தில் ரூ.13.88 கோடி மதிப்பில் 33 திட்டங்கள் தொடக்கம்: அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி பங்கேற்பு..!

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் குண்டடம் மற்றும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.13.88 கோடி மதிப்பீட்டில் 33 புதிய திட்டப்பணிகளைத் துவக்கி வைத்தனர்.



திருப்பூர்: கொளத்துப்பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகில் ரூ.6.64 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டத்தின் கீழ் 26 திட்டப்பணிகள், ராமமூர்த்தி நகரில் பகுதிநேர நியாயவிலைக்கடை, தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், பஞ்சப்பட்டியில் பகுதி நேர் நியாயவிலைக்கடை உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை அமைச்சர்கள் சாமிநாதனும், கயல்விழியும் பங்கேற்று திறந்து வைத்தனர்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் குண்டடம் மற்றும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.13.88 கோடி மதிப்பீட்டில் 33 புதிய திட்டப்பணிகளைத் துவக்கி வைத்தனர்.

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் திருப்பூர் மாவட்டம் குண்டடம், தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் மற்றும் பல்வேறு திட்டத்தின் கீழ் ரூ.13.88 கோடி மதிப்பீட்டில் 33 புதிய திட்டப்பணிகளைத் துவக்கி வைத்து, திட்டப்பணிகளை திறந்து வைத்தனர்.



கொளத்துப்பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகில் ரூ.6.64 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டத்தின் கீழ் 26 திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், ராமமூர்த்தி நகரில் பகுதிநேர நியாயவிலைக்கடையை திறந்து வைத்தும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், பஞ்சப்பட்டியில் பகுதி நேர் நியாயவிலைக்கடையை திறந்து வைத்தும், கோவிந்தாபுரத்தில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் கோவிந்தாபுரம் முதல் குண்டடம் சாலை வரை சாலை மேம்பாட்டுப் பணியினையும் என மொத்தம் ரூ.13.88 கோடி மதிப்பீட்டில் 33 புதிய திட்டப்பணிகளைத் துவக்கி மற்றும் திறந்து வைக்கப்பட்டது.



முன்னதாக, கொளத்துப்பாளையம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை மற்றும் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் இணைந்து நடத்திய மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்களை துவக்கி வைத்து, 03 விவசாயிகளுக்கு ரூ.84.000/- மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புக் கடனுதவியையும், 07 விவசாயிகளுக்கு ரூ.7.25 இலட்சம் மதிப்பீட்டில் பயிர்க் கடனுதவியையும், 01 மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் சுயஉதவிக்குழு கடனுதவியையும் என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.9.59 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளையும், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 05 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும் வழங்கி, முகாமில் கலந்து கொண்ட கன்றுகளில் சிறந்த கிடாரி கன்றாக தேர்வு செய்யப்பட்ட 03 கன்றுகளுக்கும், விவசாயிகளுக்கு சிறந்த பால் 03 உற்பத்தியாளர்களுக்கான பரிசு மற்றும் நற்சான்றிதழ்களையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினர்.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...