துடியலூரில் உள்ள ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம் - சுற்றுவட்டாரப்பகுதி பக்தர்கள் பங்கேற்பு

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அரசடி ஸ்ரீ இராஜகணபதி திருக்கோவில் மற்றும் அருள்மிகு சிவகாமி அம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை சிவசங்கரேஸ்வரர் திருக்கோவிலில் நூதன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.



கோவை: அருள்மிகு அரசடி ஸ்ரீ இராஜகணபதி திருக்கோவில் மற்றும் அருள்மிகு சிவகாமி அம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை சிவசங்கரேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு அரசடி ஸ்ரீ இராஜகணபதி திருக்கோவில் மற்றும் அருள்மிகு சிவகாமி அம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை சிவசங்கரேஸ்வரர் திருக்கோவில். இக்கோவில் திருப்பணிகள் சாக்த ஸ்ரீ வாராகி மணிகண்ட சுவாமிகள் நல்லாசியுடன் நடைபெற்று கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றன.

இதையடுத்து கோவிலில் நூதன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கடந்த வியாழக்கிழமை கிராம தேவதை வழிபாட்டுடன் தொடங்கி முளைப்பாரி, தீர்த்தக் குட ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை முதற்கால வேள்வி பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை இரண்டாம் கால யாகம், மூன்றாம் கால யாகங்கள் நடைபெற்றன.



இன்று காலை நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்று கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி நூதன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை காரமடை சிவஸ்ரீ ஆதியோகேஸ்வர சிவம் குழுவினர் நடத்திவைத்தனர்.



தொடர்ந்து அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.



இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...