நாட்டின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு அதிமுக ஆதரவு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செய்தியாளரிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பாரத் என்ற பெயரை அனைவரும் விரும்புவதாகவும், ஆகையால் நாட்டின் பெயரை பாரத் என்று மாற்றுவதில் எந்த தவறும் இல்லை, இதற்கு எடப்பாடி பழனிசாமியே ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.


மதுரை: பாரத் என்ற பெயரை அனைவரும் விரும்புகின்றனர். அதனால் இந்தியா என்பதை மாற்றுவது தவறில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பி.கே.மூக்கையா தேவரின் நினைவு நாளையொட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் அவரின் நினைவிடத்தில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையா தேவர் சிலை அமைக்க, அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு சட்டத்தை நிறைவேற்றி தந்தார்.

இந்தியாவுக்கு பாரதம் என்று பெயர் வைத்தால் தவேறு ஒன்றும் இல்லை. திமுகவை சேர்ந்த டி.ஆர்.பாலுவே இதனை ஒப்புக் கொண்டுள்ளார். பாரதம் என்ற பெயரை அனைவரும் விரும்புகிறார்கள்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...