உடுமலை நகர செயலாளராக உள்ள சற்குணசாமியின் மகளும் திருப்பூர் புறநகர் மாவட்ட இணை செயலாளருமான கிருஷ்ணம்மாள் இல்ல புதுமனை புகு விழாவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்றார்.
திருப்பூர்: திருப்பூர் புறநகர் மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணம்மாள் இல்ல புதுமனை புகு விழாவில் பங்கேற்க வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடன் ஏராளமான நிர்வாகிகள் வந்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர செயலாளராக உள்ள சற்குணசாமி அவர்களின் மகளும் திருப்பூர் புறநகர் மாவட்ட இணை செயலாளருமான கிருஷ்ணம்மாள் இல்ல புதுமனை புகு விழாவிற்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வருகை புரிந்தார்.
உடன் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் காமராஜ், அவை தலைவர் வெங்கடுபதி, உடுமலை நகர செயலாளர் சற்குணசாமி, உடுமலை தொகுதி செயலாளர் ஜெயசீலன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் நாகராஜ், தாராபுரம் நகர செயலாளர் ஜவஹர், பொதுக்குழு உறுப்பினர் ராஜபிரகாஷ், கோபி, அமனுல்லா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.