கோவையில் ரயில் நிறுத்த வளாகம் அமைத்திடுக.!! ரயில்வே வாரிய தலைவருக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்!

கோவை மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களில் புதிய ரயில் பெட்டிகள் நிறுத்தி பராமரிக்க பிட் லைன் அமைக்க வேண்டும் என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: போத்தனூர் ரயில் நிலையத்தில் புதிய ரயில் பெட்டிகள் நிறுத்திமிடம் மற்றும் பராமரிப்பு மையம் 3 பிட் லைன்கள் மற்றும் 4 ஸ்டேபிலிங் லைன்களுடன் அமைக்க வேண்டும் என்று ரயில்வே வாரியத் தலைவருக்உ நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடிதம் எழுதியுள்ளார்.

கோவை மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களில் புதிய ரயில் பெட்டிகள் நிறுத்தி பராமரிக்க பிட் லைன் அமைக்க வேண்டும் என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

ரயில்வே வாரியத் தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, கோவை தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். தென்னக இரயில்வேயில் அதிக வருமானம் ஈட்டும் நிலையங்களில் கோவை ரயில் நிலையம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இத்தகைய சிறப்பு மிக்க பகுதியில் இருந்து புதிய ரயில்கள் இயக்க கோரிக்கைகள் வைக்கும் போதெல்லாம் ரயில்வே நிர்வாகம், கோவை ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் நிறுத்திட போதிய இடவசதி இல்லாததால் புதிய ரயில்கள் அறிவிக்க இயலவில்லை என்று காரணம் சொல்லி வருகின்றது. இதன் காரணமாக கோவை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள போத்தனூர் ரயில் நிலையத்தில் பெட்டிகள் நிறுத்துமிடம் மற்றும் பராமரிப்பு மையம் அமைத்திட வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனாலும் அக்கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. சமீபத்தில் சேலம் ரயில்வே கோட்டம் இதற்கென அனுப்பிய முன்மொழிவுகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அறிகிறேன். போத்தனூர் ரயில் நிலையத்தில் புதிய ரயில் பெட்டிகள் நிறுத்திமிடம் மற்றும் பராமரிப்பு மையம் 3 பிட் லைன்கள் மற்றும் 4 ஸ்டேபிலிங் லைன்களுடன் அமைத்திட தென்னக இரயில்வே பொதுமேலாளர் ஒப்புதலுடன், ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குநர் (பணிகள்) அவர்களுக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவு இன்னும் நிலுவையில் உள்ளது.

ரயில் பெட்டிகள் நிறுத்திமிடம் மற்றும் பராமரிப்பு மையம் புதிதாக அமைத்திடாமல், கோவையில் இருந்து புதிய ரயில்கள் சாத்தியம் இல்லை என்ற சூழல் உள்ளது. எனவே , கொடுக்கப்பட்ட முன்மொழிவுகள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறேன். அது நடைமுறைப்படுத்துவது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...