தேர்தலுக்கு தயாராகும் அதிமுக நிர்வாகிகள் - பல்லடம் சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரம்

திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முதலிபாளையம் ஊராட்சியில் அதிமுக சார்பில் இன்று அனைத்து கிளைகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: முன்னாள் எம்எல்ஏ மற்றும் பல்லடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கரைப்புதூர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற பத் கமிட்டி ஆலோசனைக்கூட்டத்தில் முதலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கழக இணை செயலாளர் மயூரி பிரியா நடராஜன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டர்.



2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முதலிபாளையம் ஊராட்சியில் இன்று அனைத்து கிளைகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



முன்னாள் எம்எல்ஏ மற்றும் பல்லடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கரைப்புதூர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய கழக இணை செயலாளர் மயூரி பிரியா நடராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சில்வர் வெங்கடாசலம், ஒன்றிய கழக அவைத் தலைவர் இடுவாய் சென்னியப்பன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் மங்கலம் முருகசாமி, ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வைஸ் முத்துக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் கல்பனா வேலுச்சாமி மற்றும் கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில் பூத் வாரியாக இளைஞர் அணி மற்றும் இளம் பெண்கள் அணி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பது குறித்து முன்னாள் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தார்.

அதனைத்தொடர்ந்து அனைத்து கிளை நிர்வாகிகளுக்கும் பூத் கமிட்டி உறுப்பினர் கையேடு வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...