ரத்தினபுரியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு - பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் பொதுமக்கள் புகார்

கோவை ரத்தினபுரி பகுதியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு சம்பவம் நடைபெற்றதால் பாதுகாப்பு வழங்க கோரி சுமார் 100-க்கும் பொதுமக்கள் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.



கோவை: காவல்துறையினர் இரவு பகலாக ரோந்து பணி மேற்கொண்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுகொண்டனர்.



கோவை ரத்தினபுரி பகுதியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு சம்பவம் நடைபெற்றதால் பாதுகாப்பு வழங்க கோரி சுமார் 100-க்கும் பொதுமக்கள் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.



கடந்த 15 நாட்களில் 7-க்கும் மேற்பட்ட இடங்களில் ரத்தினபுரி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட GPM நகர், பூம்புகார் நகர், சேவா நகர் மற்றும் லட்சுமிபுரம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் அரங்கேற்றி உள்ளது.

நேற்று பகல் நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதற்கு இரண்டு நாட்கள் முன்பு காலை 6 மணியளவில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறிக்க திருடர்கள் முயற்சித்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் பெரும்பளவில் அச்சம் அடைந்துள்ளனர்.

காவல்துறையினர் இரவு பகலாக ரோந்து பணி மேற்கொண்டால் மட்டுமே இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று பொதுமக்கள் கூறினர். இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் துறையினர் இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே கரும்புக்கடை பகுதியில் இரவு நேரங்களில் குறிப்பாக ஒரே சமயத்தில் இருசக்கர வாகனங்கள் திருடியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...