துடியலூரில் ஏழை கல்லூரி மாணவியின் படிப்பிற்கு உதவிய திமுக நிர்வாகிக்கு குவியும் பாராட்டு!

துடியலூரில் திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் ஒரு பகுதியான அண்ணா பிறந்தநாள் விழாவில், ஏழை கல்லூரி மாணவியின் கல்லூரி படிப்பிற்கு உதவும் வகையில் அவருக்கு தேவையான பாட புத்தகங்களை திமுக நிர்வாகி தமிழ் நிதி தனது சொந்த செலவில் வழங்கினார்.



கோவை: துடியலூர் அருகே நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் ஏழை கல்லூரி மாணவியின் படிப்பிற்கு உதவியாக பாடப்புதகங்களை திமுக நிர்வாகி தமிழ் நிதி தனது சொந்த செலவில் வழங்கினார்.



திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூரில் உள்ள திமுக மன்றத்தில் துடியலூர் பகுதி கழக திமுக சார்பில் முதல் நிகழ்வாக அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத் துவக்க விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு துடியலூர் பகுதிக் கழகச் செயலாளர் அருள்குமார் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.



தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திரூருவப்படத்திற்கு ஒவ்வொருவராக மலர் தூவி மரியாதை செய்தனர்.



தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்.சி இறுதி ஆண்டு படித்து வரும் துடியலூரை சேர்ந்த கூலி தொழிலாளிகளான துரைசாமி – சரஸ்வதி ஆகியோரின் மகளான சங்கீதாவிற்கு அவர்களது குடும்ப சூழ்நிலை கருதி திமுக இரண்டாவது வட்ட துணைசெயலாளர் தமிழ்நிதி கடந்த நான்கு ஆண்டுகளாக கல்லூரி படிப்பிற்க்கு தேவையான புத்தகங்களை வருகிறார்.

அதேபோல் இந்த ஆண்டும் அண்ணா பிறந்தநாள் விழாவில் பகுதி கழக செயலாளர் அருள்குமார் மாணவியின் தாயாரிடம் இறுதி ஆண்டிற்கான புத்தகங்களை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த சரஸ்வதி உள்ளிட்ட மகளிர் கலைஞரின் மகளிர் உரிமை கிடைத்துள்ளதால் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், வட்ட செயலாளர் சண்முகம், மாமன்ற உறுப்பினர் புஷ்பமணி, நிர்வாகிகள் ரேவதி, ராமசாமி, ஆறுச்சாமி, அருக்காணி, மாரியப்பன், நாராயணன், சோபனா, அன்பழகன், பழனிச்சாமி, சுப்பிரமணி, கோவிந்தன், செல்வராஜ், சின்னசாமி, தனபாக்கியம், வெற்றி செல்வி, சோமசுந்தரம், பிரபாகரன், கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...