திருப்பூர் அருகே பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து பாலியல் வன்புணர்வு - பரபரப்பு!

திருப்பூர் அவிநாசி மங்கலம் புறவழி சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த ஆதரவற்ற பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: அவிநாசி மங்கலம் புறவழிச் சாலையில் படுத்துறங்கிய பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு, பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி மங்கலம் புறவழிச் சாலை அருகேயுள்ள கடை முன்பாக ஆதரவற்ற நிலையில் பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். நேற்று இரவு கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் அருகே கல்லை தூக்கி கொண்டு வந்த நபர் ஒருவர் பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.



ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை அருகில் உள்ள பயன்பாட்டில் இல்லாத மழை நீர் வடிகாலுக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிகிறது.



இந்நிலையில், காலையில் சடலத்தை மீட்ட அவிநாசி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கொலையான பெண் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம்.

இதனை அறிந்த நபர் ஒருவர் வன்புணர்வு செய்வதற்காக கொலை செய்திருக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பின் வன்புணர்வு செய்யப்பட்டாரா என்பது முழுமையாக தெரியவரும். மேலும், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...