உடுமலையில் புகழ்பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

உடுமலையில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த விநாயகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: உடுமலையில் உள்ள பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த விநாயகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காலையில் ஹோம பூஜையும், பால், தயிர் உட்பட பத்துக்கு மேற்பட்ட பொருட்கள் மூலம் அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகள் செய்யபட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



இந்த பூஜையில், உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் மேற்கொண்டனர்.



இதேபோல உடுமலை குட்டை திடல் பகுதியில் உள்ள ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சந்தன காப்பு மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.



மேலும் அரசு மருத்துவமனை அருகில் உள்ள வினை தீர்க்கும் விநாயகர் திருக்கோவிலில் தங்கக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...