தாராபுரத்தில் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரனை

தாராபுரத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர்: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்பொழுது மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நாடார் தெரு பகுதியைச் சேர்ந்த வெற்றி வேந்தன்- புனிதா தம்பதியினர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிவேந்தன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

வெற்றிவேந்தனின் மூத்த மகள் ரித்திகா (18) காங்கயத்தில் உள்ள தனியார் கல்லூரியில் (பி.காம் சி.ஏ) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ரித்திகாவின் தாய் புனிதா இன்று காலை வழக்கம் போல் காலை 10 மணிக்கு சென்று விட்டு மாலை 5.30 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்பொழுது மகள் ரித்திகா அறை உள்பக்கம் தாழிட்டிருந்தது நீண்ட நேரம் ஆகியும் திறக்காமல் இருந்த்தது. இதனால் சந்தேகம் அடைந்து அவரது தாயார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது ரிருத்திகா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரித்திகாவை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



அங்கு ரித்திகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரித்திகா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற தாராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தாராபுரத்தில் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...