கோவை இதய தெய்வம் மாளிகையில் அதிமுகவின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை: கூட்டணியும் கிடையாது ஒரு புண்ணாக்கும் கிடையாது என கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜிஅருண்குமார் தெரிவித்தார்.
கோவை இதய தெய்வம் மாளிகையில் அதிமுகவின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அண்ணாமலையின் பேச்சுகள் தொடர்பாகவும் கூட்டணி தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. செய்தியாளர் சந்திப்பின் இறுதியில் அண்ணாமலையை நீக்கினாலோ, அல்லது அண்ணாமலை வருத்தம் தெரிவித்தாலோ மீண்டும் கூட்டணி அமைக்கப்படுமா என செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.
அப்போது SP வேலுமணி அக்கேள்வியை தவிர்த்து எழுந்து சென்றார். இதை அடுத்து செய்தியாளர் சந்திப்பில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மேடையில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது கூட்டணியும் கிடையாது ஒரு புண்ணாக்கும் கிடையாது என கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜிஅருண்குமார் கூறிச் சென்றார்.