கோவை மாவட்ட திட்டக்குழுவின் இரண்டாவது கூட்டம் - மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பங்கேற்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழுவின் இரண்டாவது கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் முன்னிலையில், மாவட்ட திட்டக்குழு தலைவர் சாந்திமதி அசோகன் தலைமையில் நடைபெற்றது.


கோவை: வளர்ச்சித்திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியும் என்பதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழுவின் இரண்டாவது கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் முன்னிலையில், மாவட்ட திட்டக்குழு தலைவர் சாந்திமதி அசோகன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலர் மாவட்ட ஊராட்சி செயலர் பாஸ்கர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் நகராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.



மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களை ஒருங்கிணைப்பதற்காகவும்,மாவட்டம் முழுவதற்கும் ஒட்டு மொத்தமாக வரைவு வளர்ச்சித் திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காகவும், மாவட்ட திட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் பணியானது மாவட்டத்திற்கான வளர்ச்சி உத்திகள், திட்டங்கள் செயல் திட்டங்கள் உருவாக்குதல் ஆகிய பணிகளை மாவட்ட திட்டக்குழு மேற்கொள்ளும். இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட திட்டக்குழு தலைவர் சாந்திமதி அசோகன், தற்போது இரண்டாவது கூட்டம் நடைபெறுகின்றது. திட்டக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையினை ஏற்று இன்றையதினம் திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் கொடுத்த கோரிக்கைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து சம்மந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளது.

கோரிக்கைகளின் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அதன் விவரத்தை மாவட்ட திட்டக்குழுவிற்கு தெரிவிக்கவேண்டும் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாவட்ட திட்டக்குழுவில் புதிய வளர்ச்சித் திட்டம் ஒன்றை தயார் செய்வதற்கு விவாதித்து, பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கும்போது தேவையான திட்டத்திற்கான கருத்துகள் பரிந்துரைகள் செய்யப்படும். இதன் மூலம் சிறந்த திட்டத்தை தயாரிக்க உதவியாக இருக்கும். 3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பாக, அடுத்த கூட்டத்தில் அக்கோரிக்கைகளின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவிக்கவேண்டும். இதனால் வளர்ச்சித்திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியும். இதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...