இந்து முன்னணி சார்பில் குன்னூரில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் சிம்ஸ் பூங்காவில் தொடங்கி லாஸ் நீர்வீழ்ச்சியில் நிறைவடைந்து.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி சார்பில் 108 விநாயகர் சிலைகள் கடந்த 18-ந்ம்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
இந்த நிலையில் விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் குன்னூரில் நடைபெற்றது. சிம்ஸ்பூங்காவில் தொடங்கிய ஊர்வலம் பெட்போர்டு, மவுண்ட்ரோடு, பஸ்நிலையம் வழியாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லாஸ் நீர்வீழ்ச்சியில் நிறைவடைந்தன.
அங்கு 108 விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன. முன்னதாக விநாயகர் சிலை ஊர்வலத்தில் பக்தர் ஒருவர் அலகு குத்தி பறவைக்காவடியாக வாகனத்தில் வந்தது பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குன்னூரில் விநாயகர் விசர்ஜன விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.