அத்திக்கடவு திட்டம் தண்ணீர் கோரி காலி குடத்துடன் பெண்கள் சாலையில் இறங்கி போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சூலூர் மக்கள் மறியல் காரணமாக திருச்சி- பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமம் உள்ளது. ஊராட்சி தற்போது புதிய குடியிருப்புகள் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வருகிறது சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் இப்பகுதியில் வசித்து வருகிறார்கள்
இந்நிலையில் இவர்களுக்கு அத்திக்கடவு தண்ணீர் மூலம் குடிநீர் தண்ணீரானது வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீரானது 45 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் தான் வரக்கூடிய சூழல் உள்ளது.
இதனால் அதிக தூரம் சென்று தண்ணீரை பிடித்து வரக்கூடிய சூழல் இருந்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து இங்கு தண்ணீர் வரவில்லை என்பதால் பொதுமக்கள் திருச்சி பொள்ளாச்சி சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கையில் காலி குடத்துடன் திருச்சி மற்றும் பொள்ளாச்சி சாலையை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் வரும் வரை கலைய மாட்டோம் எனக்கூறி போலீசாரிடம், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அப் பகுதியில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் அப்பகுதியில் நின்று உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.