அத்திக்கடவு தண்ணீர் வரவில்லை - சூலூர் கிராம மக்கள் 3 மணி நேரம் சாலை மறியல்

அத்திக்கடவு திட்டம் தண்ணீர் கோரி காலி குடத்துடன் பெண்கள் சாலையில் இறங்கி போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சூலூர் மக்கள் மறியல் காரணமாக திருச்சி- பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமம் உள்ளது. ஊராட்சி தற்போது புதிய குடியிருப்புகள் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வருகிறது சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் இப்பகுதியில் வசித்து வருகிறார்கள்

இந்நிலையில் இவர்களுக்கு அத்திக்கடவு தண்ணீர் மூலம் குடிநீர் தண்ணீரானது வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீரானது 45 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் தான் வரக்கூடிய சூழல் உள்ளது.

இதனால் அதிக தூரம் சென்று தண்ணீரை பிடித்து வரக்கூடிய சூழல் இருந்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து இங்கு தண்ணீர் வரவில்லை என்பதால் பொதுமக்கள் திருச்சி பொள்ளாச்சி சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கையில் காலி குடத்துடன் திருச்சி மற்றும் பொள்ளாச்சி சாலையை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் வரும் வரை கலைய மாட்டோம் எனக்கூறி போலீசாரிடம், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அப் பகுதியில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் அப்பகுதியில் நின்று உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...