இதய குறைபாடுகள், குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாராத்தான் - கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனை ஏற்பாடு

கோவையில் ஜி.கே.என்.எம் மருத்துவமனை மற்றும் எல்.எம்.டபிள்யூ நிறுவனம் இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகளுக்கு பரிசோதனை நடத்தபட்டது.


கோவை: குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சையில் பொருளாதார ரீதியாக உதவும் வகையிலும் மேலும் அவர்களது வாழ்வில் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலும் 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' (Run for Little Hearts 2023) என்னும் மாரத்தான் தொடர் ஓட்ட நிகழ்ச்சியினை எல்.எம்.டபிள்யூ நிறுவனம், லட்சுமி மில்ஸ் நிறுவனம், லட்சுமி கார்ட் குளோத்திங் நிறுவனம் மற்றும் லயன்ஸ் இன்டர்நேஷனல் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சியாளர் கிராந்தி குமார் பாடி - ஐ.ஏ.எஸ் ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி மற்றும் பிற முக்கிய பிறமுகர்களுடன் இணைந்து கொடி அசைத்து மாரத்தான் ஓட்டத்தினை துவக்கி வைத்தனர்.



2000-த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் 1, 3, 5 மற்றும் 10 கி.மீ தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.



இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இத்தொடர் திரள் ஓட்டத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.



இதனைத் தொடர்ந்து ஜி.கே.என்.எம்.மருத்துவமனை சார்பில் குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருதய பரிசோதனை மேற்கொண்டு பயனடைந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது, மேலும் உலக இருதய தினமும் செப்டம்பர் மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதய குறைபாடுகள் மற்றும் குழந்தை பருவ புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைளுக்கு மருத்துவ சிகிச்சைகள் சரியாக கிடைப்பதை ஊக்குவிக்கவும் மற்றும் இத்தகைய நோய்களுக்கு பலியான குழந்தைகளின் நினைவை போற்றும் வகையிலும் இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

உலகளவில் 3 முதல் 5 மில்லியன் குழந்தைகள் நாள்பட்ட இதய நோயுடன் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது ருமாட்டிக் காய்ச்சலின் மிகவும் தீவிரமான சிக்கலாகும்.

நான்கில் ஒரு குழந்தை இதயக் குறைபாட்டுடன் பிறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இவ்வாறு, CHD நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 2,00,000-க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது 2018 ஆய்வின்படி. இவர்களில் ஐந்தில் ஒரு பங்கினருக்கு வாழ்க்கையின் முதல் வருடத்தில் சிகிச்சை தேவைப்படும் அளவிற்கு கடுமையான குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...