கோவையில் நம்ம ஊரு சந்தை - ஆர்வத்துடன் பொருட்களை வாங்கி குவித்த மக்கள்

கோவை வீரபாண்டி பிரிவு பகுதியில் நம்ம ஊரு சந்தை என்ற பெயரில் இயற்கை வேளாண் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை ஒன்றினைத்து இயல்வாகை என்ற அமைப்பு தனியார் பள்ளியுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் கடைகளை அமைத்து பொருட்களை விற்பனை செய்தனர்.



கோவை: கோவை வீரபாண்டி பிரிவு பகுதியில் உள்ள செயிண்ட் ஜான் பள்ளி, மாணவ மாணவிகளிடையே இயற்கை சார்ந்த கல்வியை வழங்கி வருகிறது. இதற்கென பிரத்யேகமாக பள்ளி வளாகத்திலேயே தோட்டங்கள் உருவாக்கப்பட்டு இயற்கை வழியிலான காய்கறிகள், பழங்கள், மூலிகைகள் பயிரிடுவது, பயன்படுத்துவது குறித்து கற்பித்து வருகிறது.

அதில் ஒரு பகுதியாக இயல்வாகை என்ற அமைப்புடன் இணைந்து இயற்கை வழியில் உருவாக்கப்பட்ட உணவுப் பொருட்களை மட்டும் விற்பனை செய்யும் நம்ம ஊரு சந்தை என்ற நிகழ்வை ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிட்டது. அதனடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வின் தொடக்க விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அரவிந்தன் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் பாஸ்கர் வரவேற்று பேசினார்.



ஒடந்துறை ஊராட்சியின் முன்னாள் தலைவர் சண்முகம் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். மூலிகை ஆராய்ச்சியாளர் மற்றும் பாரம்பரிய மருத்துவர் மரியா பெல்சின் இயற்கைவழி உணவுப் பொருட்கள் குறித்து விளக்கினார்.



தொடர்ந்து நடந்த சந்தையில் 50க்கும் மேற்பட்ட இயற்கைவழி வேளாண் உற்பத்தியாளர்கள் இதில் பங்கேற்ற பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் வகையில் தாங்கள் தயாரித்த செக்கு எண்ணெய் வகைகள், கொல்லி மலை இஞ்சி,முடவாட்டுக்கால் கிழங்கு உள்ளிட்ட மூலிகை உணவுப் பொருட்கள், சிறுதானிய அரிசி வகைகள், இனிப்பு வகைகள், பனை ஓலை விளையாட்டு பொருட்கள், நீரா பானங்கள், பல்வேறு கீரைகளில் தயாரிக்கப்பட்ட தேனீர் உள்ளிட்ட இயற்கை வழிப் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.



இதில் இயற்கை தொடர்பான புத்தகக் கண்காட்சி, நிகர் கலைக்கூடத்தின் பறையிசை முழக்கம், பேராசிரியர் ராமராஜின் நாடகம், தாமரைச் செல்வனின் ஓரிகாமி காகிதக் கலை, மரப்பாச்சி முருகனின் பாரம்பரிய விளையாட்டுகள் ஆகிய நிகழ்வுகளும் நடைபெற்றன. இறுதியில் இயல்வாகை அமைப்பின் தலைவர் அழகேஸ்வரி அசோக் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...