இழப்பீடு தொகை கோரி தரையில் உருண்டு புரண்ட விவசாயிகள் - தாராபுரத்தில் பரபரப்பு

தாராபுரம் நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க அணையின் கட்டுமான பணிக்காக நிலத்தை வழங்கிய விவாயிகள் முழு இழப்பீடு தொகை கேட்டு 45-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் அமைந்துள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க அணையின் கட்டுமான பணிகளுக்காக விவசாயிகளிடமிருந்து 750-ஏக்கர் நிலம் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் கடந்த 1997-ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. 2000-ஆம் ஆண்டு அணைக்கான கட்டுமான பணிகளை தொடங்கப்பட்டது.

விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய விளை நிலங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு தொகை வழங்குவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்து நிலத்தைப் பெற்றுக் கொண்டனர்.

ஆனால் விவசாயிகளிடம் கூறியவாறு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என்பதால் இழப்பீட்டுத் தொகை கேட்டு நீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. 2017-ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் படி இழப்பீட்டுத் தொகை வட்டியுடன் சேர்த்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 24-ஆண்டுகள் ஆகியும் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்காத காரணத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் பலர் இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் இறந்துவிட்டனர்.



இருப்பினும் தற்போது உள்ள 150-விவசாயிகள் கோனேரிப்பட்டி பிரிவு பகுதியில் கடந்த 45-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இன்று 45-ஆவது நாள் தொடர் காத்திருக்கு போராட்டத்தில் விவசாயிகள் தரையில் உருண்டு பிரலும் போராட்டம் ஈடுபட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...