வால்பாறையில் தொடர் மழை - இரண்டு வீடுகள் இடிந்து சேதம்

வால்பாறையில் பெய்த தொடர் மழை காரணமாக 2 வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.


கோவை: கோவை வால் பாறையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர்ந்து இரண்டு வார காலமாக தொடர்ந்து சாரல் மழையும் கன மழையும் பெய்து வருகிறது .

இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சிறு சிறு நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக படிக்கட்டுகள் தடுப்பு சுவர்கள் சேதமடைகின்றன.

இந்நிலையில் வால்பாறை நகரை ஒட்டி உள்ள அண்ணா நகர் பகுதியில் அமுதா என்பவரின் வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்து பக்கத்தில் உள்ள ஆறுமுகம் என்பவரின் வீடும் சேதமடைந்தது.



இதனால் இரண்டு வீட்டின் மேல் கூரை சேதம் அடைந்தது வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தவித சேதம் இன்றி தப்பினர்.



தகவல் அறிந்த வால்பாறை நகரமன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன் நகர கழக செயலாளர் சுதாகரன் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்தனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிது பாதிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...