புரட்டாசி மாதம் எதிரொலி - குண்டடம் சந்தையில் இறைச்சிகள் விலை விழ்ச்சி

பூரட்டாசி மாதம் என்பதால் குண்டடம் வாரச்சந்தையில் ஆடு, கோழியின் விலைகள் குறைந்து போனது. புரட்டாசி மாதம் முடியும் வரை விற்பனை குறைந்து காணப்படும் என வணிகர்கள் கூறினர்.


திருப்பூர்: பூரட்டாசி மாதம் எனபதால் குண்ட்டம் இறைச்சி சந்தையில் விற்பனை மந்தமாக நடந்தது.

குண்டடத்தில் சனிக்கிழமை தோறும் அதிகாலையில் ஆடு, கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

இந்த சந்தைக்கு குண்டடம், காங்கயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வெள்ளாடுகள், செம்மறிஆடுகள் மற்றும் கோழிகள் ஆகியவைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

அதேபோல் அவற்றை வாங்குவதற்கு ஈரோடு, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் வருகிறார்கள்.

இந்த சந்தையில் கடந்த மாதம் விறுவிறுப்பாக ஆடு, கோழிகள் விற்பனையானது.

ஆனால் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சி சாப்பிடுவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதால் கடைகளில் இறைச்சி விற்பனை மந்தமாக உள்ளதால் வியாபாரிகள் குறைந்த அளவு எண்ணிக்கையில் ஆடு -கோழிகளை வாங்கிச்செல்கின்றனர்.

இம் மாதம் இறைச்சி கடை வியாபாரிகள் குறைந்த அளவே சந்தைக்கு வந்திருந்தனர். இதனால் அதிகளவில் ஆடு -கோழிகள் வாங்க ஆர்வம் காட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சியடைந்தது.

கடந்த வாரம்10கிலோ எடைகொண்ட ஆடு ரூ. 5ஆயிரத்து 500 வரை விற்பனையானது. இந்த வாரம் 10 கிேலா ஆடு ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனையானது.

அதேபோல் கோழி கடந்த வாரம் 1 கிலோ ரூ. 350 வரை விற்பனையானது. இந்தவாரம் ரூ.300 வரை மட்டுமே விற்பனையானது.

இதுபற்றி வியாபாரிகள் தரப்பில் கூறும்போது, வழக்கமாக புரட்டாசி சீசனில் ஆடுகள் மற்றும் கோழிகளின் விலை குறைவாகத்தான் இருக்கும்.

புரட்டாசி முடியும் தருவாயில் நல்ல விலை கிடைக்கும் என்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...