கோவையில் வீட்டுக்குள் பதுங்கிய சாரைப் பாம்பு - லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த பாம்புபிடி வீரர்

கோவை 100 அடி பகுதியில் சுப்பிரமணியன் என்பவரது வீட்டில் தண்ணீர் அளவிடும் மீட்டர் பாக்சில் பதுங்கிருந்த சாரைப்பாம்பை பாம்பு பிடி வீரர் லாவகமாக பிடித்தார்.


கோவை: இரண்டு வீடுகளில் இரண்டு சாரைப்பாம்புகளில் புகுந்த இரண்டு சாரைப்பாம்புகளையும் வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

கோவை 100 அடி ரோடு 9"ஆவது வீதியில் குடியிருந்து வருபவர் சுப்ரமணி. இவருடைய வீட்டில் தண்ணீர் அளவிடும் மீட்டர் பாக்சில் 4"அடி நீள சாரைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது.

இது குறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில் பாம்பு பிடி வீரரான சஞ்சய் விரைந்து வந்து மீட்டர் பாக்சில் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்தார்.

இதேபோல் ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 6 அடி நீள சாரை பாம்பையும் பாம்பு பிடி வீரர் சஞ்சய் பிடித்தார். பிடிபட்ட இரண்டு பாம்புகளையும் வனத் துறையினரிடம் அவர் ஒப்படைத்தார்.

இதனையடுத்து பிடிப்பட்ட இரண்டு பாம்புகளையும் மதுக்கரையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...