பல்லடம் அருகே செம்மிபாளையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
திருப்பூர்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்தும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செம்மிபாளையம் ஊராட்சியில் இன்று காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், சார்ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார், திட்ட இயக்குனர் மற்றும் ஊராட்சி தலைவர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த கிராம சபை கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்தும், தூய்மை பாரத இயக்கத்தை முன்னெடுப்பது குறித்தும், காசநோய் இல்லாத கிராமமாக அறிவிப்பது குறித்தும், ஊராட்சியின் வரவு செலவு ஆவணங்களை சரி பார்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மகளிர் சுய உதவி குழுவினருக்கும்,உழவர் உற்பத்தியாளர் குழுவினருக்கும், கடன் உதவி தொகை வழங்கினார்.

மேலும் முதியவர்களுக்கு கண் கண்ணாடி மற்றும் ஓய்வு பெற்ற அஞ்சல் துறை அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செம்மிபாளையம் ஊராட்சியில் இன்று காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், சார்ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார், திட்ட இயக்குனர் மற்றும் ஊராட்சி தலைவர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கிராம சபை கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்தும், தூய்மை பாரத இயக்கத்தை முன்னெடுப்பது குறித்தும், காசநோய் இல்லாத கிராமமாக அறிவிப்பது குறித்தும், ஊராட்சியின் வரவு செலவு ஆவணங்களை சரி பார்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மகளிர் சுய உதவி குழுவினருக்கும்,உழவர் உற்பத்தியாளர் குழுவினருக்கும், கடன் உதவி தொகை வழங்கினார்.
மேலும் முதியவர்களுக்கு கண் கண்ணாடி மற்றும் ஓய்வு பெற்ற அஞ்சல் துறை அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார்.