திருப்பூர் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் அரசின் விளம்பரங்களை பார்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தபட்டதாக கூறி பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் நடந்த கிராம சபை கூட்டத்தை பாஜகவினர் முற்றுகையிட்டனர்.

காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதனிடையே திருப்பூர் இடுவாய் ஊராட்சி ஆட்டையாம்பாளையம் அரசினர் தொடக்கப்பள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தமிழக அரசின் திட்டாங்கள் குரித்த விளம்பர படங்கள் காணொளி காட்சி மூலம் பொது மக்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இதனிடையே கிராம சபை கூட்டத்தில் மக்கள் குறைகளை கேட்காமல் திமுகவின் விளம்பர படங்களை கிராம சபை கூட்டத்தில் காண்பித்தது ஓட்டு வாங்கும் முயற்ச்சியில் திமுகவினர் ஈடுபடுவதாகவும். அதே போல் திமுக விளம்பர படங்களை பார்க்க பொது மக்களை கட்டாயப்படுத்தப்படுத்துவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் கிராம சபை கூட்டம் நடைபெற்ற இடத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதனால் கிராம சபை நடைபெற்ற இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதனிடையே திருப்பூர் இடுவாய் ஊராட்சி ஆட்டையாம்பாளையம் அரசினர் தொடக்கப்பள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தமிழக அரசின் திட்டாங்கள் குரித்த விளம்பர படங்கள் காணொளி காட்சி மூலம் பொது மக்களுக்கு காண்பிக்கப்பட்டது.
இதனிடையே கிராம சபை கூட்டத்தில் மக்கள் குறைகளை கேட்காமல் திமுகவின் விளம்பர படங்களை கிராம சபை கூட்டத்தில் காண்பித்தது ஓட்டு வாங்கும் முயற்ச்சியில் திமுகவினர் ஈடுபடுவதாகவும். அதே போல் திமுக விளம்பர படங்களை பார்க்க பொது மக்களை கட்டாயப்படுத்தப்படுத்துவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் கிராம சபை கூட்டம் நடைபெற்ற இடத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதனால் கிராம சபை நடைபெற்ற இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.