உடுமலை திருமூர்த்தி மலையில் வன உயிரின வார விழா விழிப்புணர்வு

உடுமலைப்பேட்டை வனச்சரகம் திருமூர்த்தி மலையில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் க.கணேஷ்ராம் தலைமையில் சுற்றுலா பயணிகளுக்கு வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: ஓசோன் படலம் சேதமடையாமல் பாதுகாப்பதன் மூலம் மனிதர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் இதர நோய்களில் இருந்து காப்பாற்றுகிறது என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.

வன உயிரின வார விழாவை முன்னிட்டு இன்று ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக் கோட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரகம் திருமூர்த்தி மலையில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் க.கணேஷ்ராம் தலைமையில் சுற்றுலா பயணிகளுக்கு வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.



இதில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் அவர்கள் கூறியதாவது திருமூர்த்தி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் பஞ்சலிங்க அருவியானது 2049மீட்டர் உயரத்தில் உள்ள பிச்சிச்சி மலையில் உள்ள சோலைக்காடுகளிலிருந்து உற்பத்தியாகி பல கிளை ஓடைகள் சேர்ந்து பஞ்சலிங்க அருவியாக திருமூர்த்தி மலை வந்தடைந்து மக்களின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

மனித குலத்திற்கு தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்கின்ற சோலைகாடுகளை காப்பாற்றுவது இன்றியமையாத கடமையாகும். மேலும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் மூலம் வெளியேறும் கார்பன் போன்ற கரிம வாயுக்களை மரங்கள் தங்களின் இலைகளில் சேமித்து வைப்பதன் மூலம் ஓசோன் படலம் சேதமடையாமல் பாதுகாப்பதன் மூலம் மனிதர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் இதர நோய்களில் இருந்து காப்பாற்றுகிறது.



இதுபோன்ற பல்வேறு பயன்கள் தரும் மரங்களை உருவாக்குவது வன உயிரினங்களே. எனவே வனம் மற்றும் வன உயிரினங்களை காப்பாற்றுவது நமது தலையாய கடமை ஆகும் என்று கூறினார். உடுமலை வனச்சரகர் சிவக்குமார் மற்றும் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...