தீ விபத்திற்கு இழப்பீடு கோரி கருப்புக் கொடி - தாராபுரம் கிராமசபை கூட்டத்தில் பரபரப்பு

குப்பைகளை எரிக்க வைக்கபடும் தீயால் வைக்கோல் தீப்பற்றி எரிந்து சேதமான விவசாயிக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி தாராபுரம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு கிராம மக்கள் கருப்புக் கொடி ஏந்தி வந்து கோரிக்கை வைத்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே நடந்த கிராம சபை கூட்டத்திற்கு பொது மக்கள் கருப்பு கொடி ஏந்தி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் சம்பத் நகர் பூங்காவில் தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்றது. பி.டி.ஒ சிவகுருநாதன் கிராமஊராட்சி, எ.பி.டி.ஒ இசக்கிமுத்து, துணைத்தலைவர் நாச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் பொதுமக்கள் சார்பாக குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகேட்டு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. மேலும் வரவு, செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் பஞ்சாயத்து பகுதி முழுவதும் கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் தரப்பில் கேள்விகள் கேட்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டது.

அலங்கியம் ரோடு ராம் நகர் பகுதியில் தூய்மைபணியாளர்கள் குப்பைகளுக்கு தீ வைத்ததால் ஒரு விவசாயின் வைக்கோல் எரிந்து சேதமானது. அதற்கு நஷ்ட ஈடு கேட்டு கிராம சபை கூட்டத்தில் அப்பகுதி மக்கள் கருப்பு கொடியுடன் வந்து தலைவர் செல்வியிடம் சரமாரி கேள்வி கேட்டனர்.



மேலும் தீ விபத்து சம்பந்தமாக தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு பதில் கூற முடியாமல் ஊராட்சி மன்ற தலைவி மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் டெங்கு பராவல் தடுப்பு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் உள்பட-21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...