அக்டோபர் 3 ஆம் தேதி கோவைக்கு வருகை தர உள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ள முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
கோவை: கோவைக்குஅக்.3 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் வருகை தர உள்ளார்.
கோவைக்கு ஒருநாள் பயணமாக நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் வருகை தர உள்ளார்.
கோவைக்கு வருகை தரும் அவர் பீளமேட்டில் நடைபெறும் துய்மை பாரதம் திட்ட விழாவில் பங்கேற்கிறார்.
இதையடுத்து கோவை இந்திரா நகரில் எஸ்.ஐ.டி.பி.ஐ. வங்கியின் புதிய கிளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
இதன் பின்னர் கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கனரா வங்கியின் கடன் திட்ட முகாமை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் துவக்கி வைக்கிறார்.
இதைதொடர்ந்து கொடிசியாவில் பாதுகாப்பு துறை தொடர்பான கூட்டமைப்பு நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.
இதன் பின்னர் பிற்பகலில் கோவை PSGR கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவர்களிடையே அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடல் நடத்துகிறார்.
இதை தொடர்ந்து மாலை கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெண்களிடம் அமைச்சர் நிர்மலா சீதா ராமன் கலந்துரையாடல் நிகழ்த்துகிறார்.
கோவைக்கு ஒருநாள் பயணமாக நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் வருகை தர உள்ளார்.
கோவைக்கு வருகை தரும் அவர் பீளமேட்டில் நடைபெறும் துய்மை பாரதம் திட்ட விழாவில் பங்கேற்கிறார்.
இதையடுத்து கோவை இந்திரா நகரில் எஸ்.ஐ.டி.பி.ஐ. வங்கியின் புதிய கிளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
இதன் பின்னர் கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கனரா வங்கியின் கடன் திட்ட முகாமை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் துவக்கி வைக்கிறார்.
இதைதொடர்ந்து கொடிசியாவில் பாதுகாப்பு துறை தொடர்பான கூட்டமைப்பு நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்.
இதன் பின்னர் பிற்பகலில் கோவை PSGR கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவர்களிடையே அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடல் நடத்துகிறார்.
இதை தொடர்ந்து மாலை கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெண்களிடம் அமைச்சர் நிர்மலா சீதா ராமன் கலந்துரையாடல் நிகழ்த்துகிறார்.