கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் சாலை பணியாளர்கள் ரத்த கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம்

சாலை பணியாளர்களின் 41 மாத பணி காலத்தை ஓய்வூதியத்துக்கு பொருந்தக்கூடிய வகையில் முறைப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் சாலை பணியாளர்கள் ரத்த கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: சாலை பணியாளர்கள் அனைவருக்கும் தர ஊதியம் ரூ.1900 வழங்க வேண்டும் என்று சாலை பணியாளர்கள் கேட்டுகொண்டனர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்த கையெழுத்திட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கோட்டத்தலைவர் ஜே.பீட்டர் தலைமை தாங்கினார்.

அப்போது தாராபுரம் கோட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி காலத்தை ஓய்வூதியத்துக்கு பொருந்தக்கூடிய வகையில் முறைப்படுத்த வேண்டும், சாலை பணியாளர்கள் அனைவருக்கும் தர ஊதியம் ரூ.1900 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பிறகு ரத்த கையெழுத்திட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோட்டச்செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்ட கிளை பொருளாளர் பாலா ராஜசேகர், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலச்செயலாளர் ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ரத்த கையெழுத்து படிவங்களை வருகிற 13-ந்தேதி சென்னையில் முதல்-அமைச்சர் இல்ல அலுவலகத்தில் சாலை பணியாளர்கள் அனைவரும் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்தி வழங்குவது என்றும், அதில் அனைவரும் கலந்து கொள்வதெனவும் முடிவு எடுக்கப்பட்டது. முடிவில் சாலை பராமரிப்பு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...