பொதுமக்கள் சரமாரி கேள்வி - சிறு கிணறு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு

திருப்பூர் மாவட்டம் சிறு கிணறு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சமை கூட்டத்தில் கிராம மக்கள் சரமாரி கேள்வி கேட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.


திருப்பூர்: டாஸ்மார்க் கடை அப்புறப்படுத்த ஏன் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கேள்வி கேட்டதால் கிராம சபை கூட்டத்தில் இருந்து பாதியிலேயே ஊராட்சி மன்றத் தலைவர் கிளம்பிச் சென்றார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடத்தை அடுத்துள்ள சிறு கிணறு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் செல்லமுத்து தலைமை தாங்கினார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டால் மட்டுமே கிராம சபை கூட்டம் நடத்தப்படும். இந்நிலையில் கிராமத்தில் உட்பட்டவர்களை கிராம சபை கூட்டத்திற்கு வந்திருக்கின்றனர்.

ஆனால், 50க்கும் மேற்பட்ட கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து நொச்சிப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று தலைவர் செல்லமுத்துவிடும் பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

டாஸ்மார்க் கடை அப்புறப்படுத்த ஏன் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி கேட்டனர். அதேபோன்று அடிப்படை வசதிகளான குடிநீர், சாக்கடை, தார் சாலை, தெரு விளக்கு, குப்பை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை செய்வதில் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுவதாக புகார் தெரிவித்தனர்.

இதற்கு பதில் கூற முடியாத ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து கூட்டத்திலிருந்து பாதியிலேயே இருந்து சென்றார். அதன் பின் அதிகாரிகள் போதிய அளவு கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்காலதால் கிராம சபை கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...