உடுமலையில் அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா - ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்பு

உடுமலை எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை மற்றும் மடத்துக்குளம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.


திருப்பூர்: அரசுப்பள்ளியில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உடுமலை எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை மற்றும் மடத்துக்குளம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் இணைந்து மரம் நடும் விழா துங்கவி அரசு மேல்நிலைப்பள்ளியில் மரம் நடப்பட்டது. இந்த விழாவில் மரங்கள் நடுவதால் ஏற்படும் நன்மை பற்றி எடுத்து கூறப்பட்டது.

மரங்களால் காற்று மாசுபாடு குறையும் எனவும் மரம் அதிகமாக இருந்தால் மழை பொழியும், இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழவும், அடுத்த தலைமுறை நல்ல காற்றோடு வாழவும் மரங்களே நமக்கு உதவும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இந்த விழாவில் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சாய் நெல்சன், மடத்துக்குளம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வேளாங்கண்ணி, பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...