ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் பொது துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் போராட்டம்

கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா மண்டல அலுவலகம் முன்பு ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள், அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் நல சங்கங்களை சேர்ந்த 18 அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழுவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.


கோவை: பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மையமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை-பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் இன்று அகில இந்திய அளவில் தர்ணா போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா மண்டல அலுவலகம் முன்பு பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள்,அதிகாரிகள்,வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் நல சங்கங்களை சேர்ந்த 18 அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழுவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மையமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 1995ம் ஆண்டு ஓய்வூதிய திட்டத்தில் அனைத்து ஊழியர்களையும் இணைத்திட வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவிகிதமாக உயர்த்திட வேண்டும், ஊதிய உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியத்தை மேம்படுத்திட வேண்டும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை 14 சதவிகிதமாக உயர்த்திட வேண்டும்" ஆகிய ஏழு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...