அண்ணாமலை விரைவில் குணமடைய பிரார்த்தனை - கோவையில் மண்சோறு சாப்பிட்ட பாஜக நிர்வாகிகள்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் குணமடைய வேண்டி கோவை மாவட்ட பாஜகவினர் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டும் அங்கப் பிரதர்ஸ்ணம் செய்தும் வழிபாடு நடத்தினர்.


கோவை: அண்ணாமலை விரைவில் குணமடைய வேண்டி கோவையில் மண்சோறு சாப்பிட்டு பாஜக நிர்வாகிகள் வழிபாடு செய்தனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் டெல்லி சென்று தேசிய தலைவர்களை சந்தித்து விட்டு சென்னை திரும்பினார். இதனையடுத்து மீண்டும் அவரது நடைப்பயணம் 6ம்தேதி மேட்டுப்பாளையத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அண்மையில் தெரிவிக்கப்பட்டது.



இதனால் அண்ணாமலையின் நடை பயணம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ள நிலையில் அண்ணாமலை பூரண குணமடைய வேண்டி கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வசந்தராஜன் ஆலோசனைப்படி தெற்கு மாவட்ட சமூக ஊடக பிரிவு தலைவர் செல்வகுமார், ஆலந்துறை மண்டல தலைவர் ஜோதி ஆகியோர் முன்னிலையில் பாஜக தொண்டர்கள் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மண் சோறு சாப்பிட்டும் கோவில் வளாகத்திற்குள் அங்க பிரதோஷணம் செய்தும் வேண்டிக்கொண்டனர். பின்னர் அண்ணாமலை விரைவில் குணமடைந்து வர வேண்டிய சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...