பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் குணமடைய வேண்டி கோவை மாவட்ட பாஜகவினர் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டும் அங்கப் பிரதர்ஸ்ணம் செய்தும் வழிபாடு நடத்தினர்.
கோவை: அண்ணாமலை விரைவில் குணமடைய வேண்டி கோவையில் மண்சோறு சாப்பிட்டு பாஜக நிர்வாகிகள் வழிபாடு செய்தனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் டெல்லி சென்று தேசிய தலைவர்களை சந்தித்து விட்டு சென்னை திரும்பினார். இதனையடுத்து மீண்டும் அவரது நடைப்பயணம் 6ம்தேதி மேட்டுப்பாளையத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அண்ணாமலையின் நடை பயணம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ள நிலையில் அண்ணாமலை பூரண குணமடைய வேண்டி கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வசந்தராஜன் ஆலோசனைப்படி தெற்கு மாவட்ட சமூக ஊடக பிரிவு தலைவர் செல்வகுமார், ஆலந்துறை மண்டல தலைவர் ஜோதி ஆகியோர் முன்னிலையில் பாஜக தொண்டர்கள் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மண் சோறு சாப்பிட்டும் கோவில் வளாகத்திற்குள் அங்க பிரதோஷணம் செய்தும் வேண்டிக்கொண்டனர். பின்னர் அண்ணாமலை விரைவில் குணமடைந்து வர வேண்டிய சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் டெல்லி சென்று தேசிய தலைவர்களை சந்தித்து விட்டு சென்னை திரும்பினார். இதனையடுத்து மீண்டும் அவரது நடைப்பயணம் 6ம்தேதி மேட்டுப்பாளையத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அண்ணாமலையின் நடை பயணம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ள நிலையில் அண்ணாமலை பூரண குணமடைய வேண்டி கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வசந்தராஜன் ஆலோசனைப்படி தெற்கு மாவட்ட சமூக ஊடக பிரிவு தலைவர் செல்வகுமார், ஆலந்துறை மண்டல தலைவர் ஜோதி ஆகியோர் முன்னிலையில் பாஜக தொண்டர்கள் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மண் சோறு சாப்பிட்டும் கோவில் வளாகத்திற்குள் அங்க பிரதோஷணம் செய்தும் வேண்டிக்கொண்டனர். பின்னர் அண்ணாமலை விரைவில் குணமடைந்து வர வேண்டிய சிறப்பு வழிபாடு நடத்தினர்.