கோவையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றி விழிப்புணர்வு பேரணி - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

கோவை வடக்கு வட்டம் சார்பில் அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் மூலம் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார்.


கோவை: தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றி விழிப்புணர்வு பேரணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர்.

தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 5ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு வட்டம் சார்பில் அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் மூலம் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறும் விழிப்புணர்வு முழக்கங்களுடனும் பேரணி மேற்கொண்டனர்.



அரசு கலைக் கல்லூரியில் துவங்கிய இந்த பேரணி பந்தய சாலையை முழுவதும் சுற்றி மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.

இந்நிகழ்வில் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், அரசு கலைக் கல்லூரி முதல்வர் உலகி உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியை அடுத்து இது குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Newsletter

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...