தாராபுரம் நகரில் வாய்க்காலில் கழிவுகளை கொட்ட வேண்டாம் - பொதுமக்களுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

தாராபுரம் நகரில் உள்ள அமராவதி ராஜ வாய்க்காலில் நகர மக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்களை கொட்டுவதால் அடைப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: ராஜவாய்க்கால்களில் குப்பை கொட்டும் நபர்கள் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுகொண்டனர்.

தாராபுரம் நகரில் உள்ள அமராவதி ராஜ வாய்க்காலில் நகர மக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்களை கொட்டி வருவதால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் மதகுகள் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்லாமல் உள்ளன என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தாராபுரம் நகரின் மத்திய பகுதியின் வழியாக அமராவதி ராஜ வாய்க்கால் ஓடிக் கொண்டுள்ளது. இதன் மூலம் ராஜ வாய்க்காலில் இருந்து விவசாய விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ந்து வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் சிலர் தங்கள் வீட்டுக் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்களை ராஜ வாய்க்காலில் கொட்டி செல்கின்றனர். இதனால் ராஜ வாய்க்காலில் மதகுகளில் தண்ணீர் செல்லும் இடங்களில் அடைப்பு ஏற்பட்டு விவசாய விளை நிலங்களுக்கு தண்ணீர் சீராக செல்லாமல் தடைபட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அதேபோல ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் மக்காத பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் பாட்டில்கள் விவசாய விளை நிலத்தை பாதிக்கின்றன. எனவே மக்கள் இதனை கருத்தில் கொண்டு ராஜ வாய்க்காலில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் ராஜவாய்க்கால்களில் குப்பை கொட்டும் நபர்கள் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் முன் வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...