தாராபுரம் அருகே செயல்படாத இ சேவை மையம் - செயல்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் கொளத்துப்பாளையத்தில் உள்ள இ சேவை மையம் செயல்படாத காரணத்தினால் பல்வேறு திட்டங்களை பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே செயல்படாமல் உள்ள இ சேவை மையத்தை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குளத்துப்பாளையம் பேரூராட்சி கூட்டுறவு கடன் சங்கத்தில் இ சேவை மையம் முறையாக செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் இணைப்பதிவாளருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தாராபுரம் வட்டார தலைவர் காளிதாஸ் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது, தாராபுரம் வட்டம் கொளத்துப்பாளையம் கிராமத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தின் இ சேவை மையம் தற்போது செயல்படாமல் உள்ளது. இந்த மையத்தில் இரண்டு பணியாளர்கள் இருந்தும் முறையாக செயல்படுத்துவதில்லை.

இதனால் வருவாய் சான்றிதழ்கள் உள்ளிட்ட இதர சேவைகளுக்கு தனியார் சேவை மையத்தை நாடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .எனவே கொளத்துப்பாளையம் கூட்டுறவு கடன் சங்கத்தில் இ சேவை மையத்தை முறையாக செயல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...