‌விண்ணப்பித்த இரு வாரத்தில் நகல் குடும்ப அட்டை - கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

நகல் ரேஷன் கார்டு பெற, ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பவர்களுக்கு இருவாரத்தில் தபால் மூலம் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


கோவை: விண்ணப்பித்த இரு வாரத்தில் நகல் குடும்ப அட்டை வீடு தேடி வரும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில், 10 ஆயிரம் ரேஷன் கார்டு நகல் அச்சிடப்பட்டு, விரைவு தபால் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளன. கார்டுதாரர்கள், www.tnpds.gov.in என்ற இணைய தளத்தில் நகல் குடும்ப அட்டை என்பதை தேர்ந்தெடுத்து, பதிவு செய்துள்ள மொபைல் போன் எண்ணை உள்ளீடு செய்தால், ஒருமுறை 'பாஸ்வேர்டு' அனுப்பப்படும்.

அதை பயன்படுத்தி, விண்ணப்பிக்கலாம். நகல் அட்டைக்கான கட்டணம் ரூ.20, அஞ்சல் வழி பெறுவதற்கு ரூ.25 என, 45 ரூபாய் கட்டணம் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதற்கான ரசீதை பதிவிறக்கம் செய்து, ஒப்புகை பக்கம் மற்றும் பணபரிவர்த்தனை குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்து, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இரு வாரத்துக்குள் நகல் ரேஷன் கார்டு, விண்ணப்பதாரர் முகவரிக்கு விரைவு தபால் வாயிலாக அனுப்பப்படும்.ரேஷன் கார்டு தொலைந்து விட்டாலோ, சேதம் அடைந்திருந்தாலோ அல்லது முகவரி திருத்தம், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் ஆகிய திருத்தங்கள் செய்தபின், நகல் கார்டு பெற விரும்பினால் விண்ணப்பிக்கலாம். நகல் கார்டு அச்சிட்டு வழங்க தனியார் நிறுவனத்துக்கோ, தனி நபருக்கோ எவ்வித அனுமதியும் அரசால் வழங்கப்படவில்லை என, ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

Newsletter

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...