‌உடுமலையில் போக்குவரத்து விதிகளை மீறிய 38 வாகனங்கள் - ரூ.7 லட்சம் அபராதம் விதிப்பு

உடுமலை பகுதியில் கடந்த மாதத்தில் போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் போக்குவரத்து விதிகளை மீறிய 38 வாகனங்களின் உரிமையாளர்களிடம் இருந்து 7 லட்சத்து 16 ஆயிரத்து 700 ரூபாய் வசூலிக்கப்பட்டது.


திருப்பூர்: பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் இயக்கப்படும் வானங்களை கண்டறிந்து சிறை பிடித்து கடுமையான அபராதம் விதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இணை போக்குவரத்து ஆணையர் உத்தரவுப்படி வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி உள்ளிட்டோர் வாகன பரிசோதனையை மேற்கொண்டனர்.

அதன்படி உடுமலை வட்டார பகுதியில் செப்டம்பர் மாதத்தில் தொடர் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 399 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. இதில் பல்வேறு குற்றங்களுக்காக 108 வானங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.

தகுதி சான்று புதுப்பிக்காதது, சாலை வரி செலுத்தாதது, அனுமதி சீட்டு இல்லாதது மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட 38 வாகனங்கள் சிறை பிடித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

மேற்கண்ட வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கிய வகையில் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 200 மற்றும் அபராதமாக ரூ.7 லட்சத்து 16 ஆயிரத்து 700 வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து முறைகேடாக பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் இயக்கப்படும் வானங்களை கண்டறிந்து சிறை பிடித்து கடுமையான அபராதம் விதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...