நல்லதங்காள் நீர் தேக்க அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் நூதன போராட்டம்

தாராபுரம் அருகே நல்லதங்காள் நீர் தேக்க அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி 57 வது நாளாக தமிழ்நாடு அரசு கவன ஈர்ப்பு விதமாக பிணம் போல் வேடமிட்டு ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 திருப்பூர்: நல்லதங்காள் அணைக்கட்டிற்கு கட்டுமான பணிகளுக்காக நிலம் வழங்கிய விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைமைச் செயலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு கட்டுவதற்காக தமிழ்நாடு அரசால் விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்த பின் அங்குள்ள விவசாயிகளுக்கு நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாயும் மானாவாரிய இடத்திற்கு சுமார் 50,000 வரை வழங்குவதாக கூறி உரிய பணம் வழங்காமல், குறைந்த அளவிலேயே பணம் வழங்கி விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இன்று வரை 26-ஆண்டுகள் கடந்த பின்பும் இன்று வரை அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை எனக்கோரி, மேலும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாயும் மானாவாரிய இடத்திற்கு சுமார் 75-ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று வரை இழப்பை இட்டுத்தொகை வழங்காததை கண்டித்து தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் 57-ஆம் நாளாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



57-நாட்களாக கடந்தும் இதுவரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை நல்லதங்காள் அணைக்கு நிலம் வழங்கிய விஜயன் என்பவர் இறந்த பிணம் போல வேடமிட்டு அவர் இறந்து விட்டதாக கருதி பெண்கள் ஒப்பாரி இட்டு (இறந்த இல்லம்) இல்லத்தில் நடைபெறும் சடங்குகள் போல் நெத்தியில் ஒரு ரூபாய் நாணயம் வைத்து தலைக்கு துண்டு கட்டி வெள்ளை வேஷ்டி விரித்து பாடை கட்டி வைத்து நாற்காலியில் அமர வைத்து பெண்கள் ஒப்பாரி இட்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளை அக்டோபர் 10-ஆம் தேதி காலை நல்லதங்காள் அணைக்கட்டிற்கு கட்டுமான பணிகளுக்காக நிலம் வழங்கிய விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை தலைமை செயலாக்கம் முன்பு உண்ணாவிரதம் போராட்டத்தில்ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...