நல்லதங்காள் நீர் தேக்க அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் நூதன போராட்டம்

தாராபுரம் அருகே நல்லதங்காள் நீர் தேக்க அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி 57 வது நாளாக தமிழ்நாடு அரசு கவன ஈர்ப்பு விதமாக பிணம் போல் வேடமிட்டு ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 திருப்பூர்: நல்லதங்காள் அணைக்கட்டிற்கு கட்டுமான பணிகளுக்காக நிலம் வழங்கிய விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைமைச் செயலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு கட்டுவதற்காக தமிழ்நாடு அரசால் விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்த பின் அங்குள்ள விவசாயிகளுக்கு நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாயும் மானாவாரிய இடத்திற்கு சுமார் 50,000 வரை வழங்குவதாக கூறி உரிய பணம் வழங்காமல், குறைந்த அளவிலேயே பணம் வழங்கி விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இன்று வரை 26-ஆண்டுகள் கடந்த பின்பும் இன்று வரை அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை எனக்கோரி, மேலும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாயும் மானாவாரிய இடத்திற்கு சுமார் 75-ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று வரை இழப்பை இட்டுத்தொகை வழங்காததை கண்டித்து தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் 57-ஆம் நாளாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



57-நாட்களாக கடந்தும் இதுவரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை நல்லதங்காள் அணைக்கு நிலம் வழங்கிய விஜயன் என்பவர் இறந்த பிணம் போல வேடமிட்டு அவர் இறந்து விட்டதாக கருதி பெண்கள் ஒப்பாரி இட்டு (இறந்த இல்லம்) இல்லத்தில் நடைபெறும் சடங்குகள் போல் நெத்தியில் ஒரு ரூபாய் நாணயம் வைத்து தலைக்கு துண்டு கட்டி வெள்ளை வேஷ்டி விரித்து பாடை கட்டி வைத்து நாற்காலியில் அமர வைத்து பெண்கள் ஒப்பாரி இட்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாளை அக்டோபர் 10-ஆம் தேதி காலை நல்லதங்காள் அணைக்கட்டிற்கு கட்டுமான பணிகளுக்காக நிலம் வழங்கிய விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை தலைமை செயலாக்கம் முன்பு உண்ணாவிரதம் போராட்டத்தில்ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.

Newsletter

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...

Simplicity News Impact: Coimbatore Airport Authorities Restore Drinking Water Facility

Passengers and members of the public appreciated the swift action taken by airport authorities to restore the malfunctio...

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...