தாராபுரத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு மாரத்தான் - ஏராளமானோர் பங்கேற்றனர்

தாராபுரம் உட்கோட்டம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு மாரத்தான் வேக நடை போட்டி நடைபெற்றது.


திருப்பூர்: தாரபுரத்தில் நடைபெற்ற தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு மாராத்தான் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு மாரத்தான் தாராபுரத்தில் தமிழ்நாடு காவல்துறை தாராபுரம் உட்கோட்டம் சார்பில் மினி மராத்தான் வேக நடை போட்டி நடைபெறறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். மினி மராத்தான் போட்டியை போலீஸ் துணை சூப்பிரண்டு கலையரசன் தொடங்கி வைத்தார். அதில் வேக நடை போட்டி 16 வயதுக்கு உட்பட்டவர்கள், 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. வேக நடை போட்டி தாராபுரம் காவல் நிலையம் முன்பு தொடங்கி பூக்கடை கார்னர், ஐந்து சாலை சந்திப்பு, அரசு மருத்துவ மனை, தாசில்தார் அலுவலகம் வழியாக காவல் நிலையம் வந்து அடைந்தனர்.



இந்த போட்டியில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு முதல் பரிசு ரூ.1000, இரண்டாம் பரிசு ரூ.750, மூன்றாம் பரிசு ரூ.500 அறிவிக்கப்பட்டது. அதே போன்று 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.2000, இரண்டாம் பரிசு ரூ.1000, மூன்றாவது பரிசு ரூ. 500 அறிவிக்கப்பட்டது. அத்தடன் மேலும் இரண்டு பிரிவுகளிலும் முதல் பத்து இடங்களை பிடிப்பவர்களுக்கு மெடல் வழங்கப்படும் என அறிவித்து இருந்தனர். இந்த போட்டியை தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலையரசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

16 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் அகரம் பள்ளியை சேர்ந்த மாணவர் ஹரிஹரன், ஹரி சரண், தீபக் ஆகியோர் முதல் மூன்று இடஙகளை பிடித்தனர். அடுத்து 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரிவில். முகமது வாசர் மற்றும் அம்ருத், முகமது தபிக் மற்றும் நவீன் ராஜ், போல்ராம் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மேலும் இரண்டு பிரிவுகளலும் முதல் பத்து இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த போட்டியில், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...