உடுமலையில் வானவியல் சார் பயிற்சி பட்டறை - சூரிய குடும்பம் பற்றி மாணவர்களுக்கு விளக்கம்

உடுமலையில் நடைபெற்ற வானவியல் சார் பயிற்சி பட்டறையில், சூரிய குடும்பம், கோள்கள், சூரியனை சுற்றி வரும் விதம் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.


திருப்பூர்: வானவியல் சார் பயிற்சி பட்டறையில். சர்வதேச விண்வெளி வார விழா பற்றியும், வன உயிரின வார விழா பற்றியும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் எடுத்துக்கூறப்பட்டது.

உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் ,உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் சார்பில் சர்வதேச விண்வெளி வார விழா அக்டோபர் 4 முதல் 10 வரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன் அடிப்படையில் அக்டோபர் 7 அன்று அந்தியூர் கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான வானவியல் சார் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் சூரிய குடும்பம், கோள்கள், சூரியனை சுற்றி வரும் விதம், நிலவின் முகங்கள், நட்சத்திர தொகுதிகளை எளிதில் அடையாளம் காணுதல், சூரிய கடிகாரம், பந்து கண்ணாடி மாயக்கண்ணாடி, ஓரிடத்தில் உள்ளூர் நண்பகல் நேரத்தை கணக்கிடுதல், சரியான திசைகளை சூரியனின் நிழலை வைத்து கணக்கிடுதல் என்பது போன்ற பல்வேறு வானவியல் சார் கருத்துக்களை எளிமையாக தெரிந்து கொள்வதற்கான எளிய பொருட்களைக் கொண்டு அறிவியல் சார் கருவிகளை மாணவர்கள் தாங்களாகவே செய்ய வழி காட்டப்பட்டது.



அது சார்ந்த வானவியல் சார் கருத்துக்களை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், ஜிவிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியும் கருத்தாளருமான ஹரிணி ஆகியோர் விளக்கிக் கூறினர். கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை வகித்தார். உடுமலை உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சர்வதேச விண்வெளி வார விழா பற்றியும், வன உயிரின வார விழா பற்றியும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் எடுத்துக் கூறினார்.

குறிப்பாக ஆனைமலை புலிகள் காப்பகத்தை பாதுகாக்க வேண்டியது நமது முக்கிய கடமை என்பதையும் வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார். நிறைவாக கல்லூரி அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கீதாமணி நன்றி கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...