துடியலூரில் உள்ள டியூகாஸ் நிறுவனத்தில் ஊழல் - உறுப்பினர்கள் வாக்குவாதம்

கோவை துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் கூட்டுறவு சங்கத்தில் ஊழல் நடைபெற்றதாக கூறி சில உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: டியூகாஸ் நிறுவனத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், அதற்கு செயலாட்சியர் சிவக்குமார் தான் பொறுப்பு எனவும் கூறி உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை துடியலூரிலுள்ள துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் (டியூகாஸ் நிறுவனம்) இந்தியாவில் 2வது பெரிய கூட்டுறவு விவசாய நிறுவனமாகும். இங்கிருந்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விவசாய உரங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.



இந்த நிலையில் இன்று டியூகாஸ் நிறுவனத்தில் சிறப்பு பேரவைக்கூட்டம் நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு இணைப்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்கள் 2023-ன்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையில் உள்ளதுபடி, டியூகாஸ் நிறுவனத்தில் உள்ள உறுப்பினர் பட்டியலில் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் இணைத்தல், இறந்த உறுப்பினர்களின் பெயர்களை நீக்குதல், கூட்டுறவுச் சங்கங்களின் சட்டவிதிகள் அடிப்படையில் தயார் செய்து, நிறுவனத்திலுள்ள இறுதி உறுப்பினர்கள் பட்டியலை அங்கீகரிப்பதற்காக இந்த கூட்டம் நடைபெற்றது.



அப்பொது கூட்டத்தில் கலந்துக்கொண்ட சில உறுப்பினர்கள் டியூகாஸ் நிறுவனத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், அதற்கு செயலாட்சியர் சிவக்குமார் தான் பொறுப்பு எனவும் கூறி விவாதம் செய்தனர். மேலும் டியூகாஸ் நிறுவனத்தில் தற்காலிக வேலை செய்பவர்களின் சம்பளத்தை உயர்த்த தரக்கோரி கடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், இதுநாள் வரை சம்பளம் உயர்த்தப்படவில்லை என்று கூறியும் செயலாட்சியர் சிவக்குமாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து செயலாட்சியர் சிவக்குமார் பேசும்போது, எந்தவிதமான தவறும் டியூகாஸ் நிறுவனத்தில் நடைபெறவில்லை என்றும், டியூகாஸ் நிறுவனம் லாபத்தில் இயங்கி வருகிறது என்றும், தற்காலிக வேலை செய்பவர்களின் சம்பளம் உயர்த்துவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், அதன்பிறகு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இருந்தும் கூட்டம் கடும் விவாதத்துடன் நடைபெற்றது. இறுதியில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...