துடியலூரில் உள்ள டியூகாஸ் நிறுவனத்தில் ஊழல் - உறுப்பினர்கள் வாக்குவாதம்

கோவை துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் கூட்டுறவு சங்கத்தில் ஊழல் நடைபெற்றதாக கூறி சில உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: டியூகாஸ் நிறுவனத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், அதற்கு செயலாட்சியர் சிவக்குமார் தான் பொறுப்பு எனவும் கூறி உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை துடியலூரிலுள்ள துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் (டியூகாஸ் நிறுவனம்) இந்தியாவில் 2வது பெரிய கூட்டுறவு விவசாய நிறுவனமாகும். இங்கிருந்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விவசாய உரங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.



இந்த நிலையில் இன்று டியூகாஸ் நிறுவனத்தில் சிறப்பு பேரவைக்கூட்டம் நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு இணைப்பதிவாளர் மற்றும் செயலாட்சியர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்கள் 2023-ன்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையில் உள்ளதுபடி, டியூகாஸ் நிறுவனத்தில் உள்ள உறுப்பினர் பட்டியலில் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் இணைத்தல், இறந்த உறுப்பினர்களின் பெயர்களை நீக்குதல், கூட்டுறவுச் சங்கங்களின் சட்டவிதிகள் அடிப்படையில் தயார் செய்து, நிறுவனத்திலுள்ள இறுதி உறுப்பினர்கள் பட்டியலை அங்கீகரிப்பதற்காக இந்த கூட்டம் நடைபெற்றது.



அப்பொது கூட்டத்தில் கலந்துக்கொண்ட சில உறுப்பினர்கள் டியூகாஸ் நிறுவனத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், அதற்கு செயலாட்சியர் சிவக்குமார் தான் பொறுப்பு எனவும் கூறி விவாதம் செய்தனர். மேலும் டியூகாஸ் நிறுவனத்தில் தற்காலிக வேலை செய்பவர்களின் சம்பளத்தை உயர்த்த தரக்கோரி கடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், இதுநாள் வரை சம்பளம் உயர்த்தப்படவில்லை என்று கூறியும் செயலாட்சியர் சிவக்குமாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து செயலாட்சியர் சிவக்குமார் பேசும்போது, எந்தவிதமான தவறும் டியூகாஸ் நிறுவனத்தில் நடைபெறவில்லை என்றும், டியூகாஸ் நிறுவனம் லாபத்தில் இயங்கி வருகிறது என்றும், தற்காலிக வேலை செய்பவர்களின் சம்பளம் உயர்த்துவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், அதன்பிறகு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இருந்தும் கூட்டம் கடும் விவாதத்துடன் நடைபெற்றது. இறுதியில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...