தேசிய அஞ்சல் வாரம் - கோவையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் கேக் வெட்டி ஊழியர்கள் கொண்டாட்டம்

தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு, கோவை கூட்செட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் கேக் வெட்டி ஊழியார்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.


கோவை: தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு அடுத்த ஒரு வாரத்திற்கு தலைமை தபால் நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும், இதில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அஞ்சல் ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 9ம் தேதி தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தில் அஞ்சல் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு "நம்பிக்கைக்காக ஒன்றுபடுவோம்" என்ற தலைப்பில் அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு கோவையில் உள்ள வெவ்வேறு அஞ்சல் அலுவலகங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை கூட்செட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.



அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட தபால் தலைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அஞ்சல் அலுவலகம் வந்திருந்தனர்.



இவர்கள் அஞ்சல் துறையினர் செயல்பாடுகள், அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட தபால்தலைகளை பார்வையிட்டனர்.



மேலும் அஞ்சல் ஊழியர்கள் கேக் வெட்டி, கோலமிட்டு கொண்டாடினர். அஞ்சலக ஊழியர்கள் மாணவர்களுக்கு அஞ்சல் உறைகளை வழங்கி கடிதம் எவ்வாறு அனுப்ப வேண்டும் என்பது குறித்து தெரிவித்தனர்.

அடுத்த ஒரு வாரத்திற்கு தலைமை தபால் நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும், இதில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அஞ்சல் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Newsletter

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...