கல்வி மட்டுமல்ல விளையாட்டிலும் மாணவர்கள் வெற்றி - பார்க் கல்வி குழுமத்திற்கு அமைச்சர் முத்துசாமி புகழாரம்

கல்வியில் மட்டுமல்ல விளையாட்டிலும் மாணவர்கள் வெற்றி பெற பார்க் கல்வி குழுமம் ஊக்குவிப்பதாக அக்கல்வி குழுமத்தின் விழாவில் அமைச்சர் முத்துசாமி புகழாரம் சூட்டினார்.


கோவை: ஆசிரியர்கள் தங்களது மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்குவித்து வாழ்வில் வெற்றி அடைய உதவவேண்டும் என்று பார்க் கல்வி குழுமம் விழாவில் அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தினார்.

கோவை கணியூரில் அமைந்துள்ள பார்க் கல்வி குழுமத்தின் விழாவில் அமைச்சர் முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பார்க் கல்வி குழுமம் மற்றும் ரைசிங் சன் ஈவென்ட்ஸ் நடத்திய கோவை சாம்பியன்ஸ் T 20 கிரிக்கெட் போட்டியானது கடந்து அக்டோபர் 03 ஆம் தேதி துவங்கி அதன் இறுதி போட்டி 05 அக்டோபர் 2023 அன்று கணியூர் வளாகத்தில் நடை பெற்றது.

விளையாட்டு போட்டிகளில் 24 அணிகள் சிறப்பாக விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தின. இதன் இறுதி போட்டியில் ARS அகாடமி அணி கோப்பையை வென்றது. இந்த சாம்பியன்ஷிப் ஆட்டத்தின் பரிசளிப்பு விழா பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் Dr. ரவி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி வரவேற்புரையாற்றினார். அதனைத்தொடர்ந்து வெற்றிப்பெற்ற அணிகளுக்கு அமைச்சர் முத்துசாமி பரிசளித்தார். பின்னர் அவர் பேசியாதவது, மாணவர்கள் கல்வியில் மட்டுமல்ல விளையாட்டிலும் ஈடுபட்டு வெற்றிபெற வேண்டுமென்றுமென்று நமது முதலமைச்சர் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

அதுபோல பார்க் கல்வி குழுமம் தனது மாணவர்களை விளையாடிலும் மேன்மையடைய செய்வது சிறப்பு என்று வாழ்த்தினார். மாணவர்களின் திறனை பெற்றோரைவிட ஆசிரியர்களே நன்கு அறிவார்கள். ஆகவே ஆசிரியர்கள் தங்களது மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்குவித்து வாழ்வில் வெற்றி அடைய உதவவேண்டும் என்று அறிவுறுத்தினார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுக்கு வந்தது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...