உடுமலை திருமூர்த்தி அணை காண்டூர் கால்வாயில் தண்ணீர் திருடப்படுவதாக காவல் நிலையத்தில் புகார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணை காண்டூர் கால்வாயில் தண்ணீர் திருடுவோரின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: தண்ணீர் திருட்டில் ஈடுபடுவர்களை கண்காணிக்க போலீஸ் மூலம் ரோந்து பணியை தீவிரப்படுத்த பொதுமக்களும் விவசாயிகளும் வேண்டுகோள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி அணை மூலமாக பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்துக்கு 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அணைக்கு மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகள் மற்றும் பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் பெறப்படும் தண்ணீர் நீராதாரமாக உள்ளது. திருமூர்த்தி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் காண்டூர் கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு 4-ம் மண்டல பாசனத்திற்கு கடந்த மாதம் 20-ம் தேதி முதல் தண்ணீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் காண்டூர் கால்வாயில் வரும் தண்ணீரை அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு முறையற்ற வகையில் குழாய் மற்றும் மோட்டார் அமைத்து திருடுவதாக பொதுப்பணித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் திருமூர்த்தி அணை மற்றும் சீர்மட்ட கால்வாய் பிரிவு உதவிப் பொறியாளர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் தண்ணீர் திருட்டை தடுக்கும் வகையில் கடந்த 6-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பிளாஸ்டிக் குழாய் மூலமாக காண்டூர் கால்வாயில் தண்ணீர் திருடப்பட்டது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் திருமூர்த்தி நகர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் தண்ணீர் திருடியது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து திருட்டுக்கு பயன்படுத்திய குழாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இது குறித்து காவல்துறையில் நாகராஜ் மீது புகார் அளிக்கப்பட்டது. அதே போன்று கடந்த 7-ம் தேதி வளையபாளையத்திற்கு செல்லும் வரத்து கால்வாயில் தண்ணீர் திருட்டு நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரியினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிளாஸ்டிக் குழாய் அமைத்து தண்ணீர் திருட்டு நடைபெறுவது கண்டறியப்பட்டது.



அதன் பேரில் நடைபெற்ற விசாரணையில் நாகராஜ், செல்வராஜ், காந்திமதி, கஞ்சிமலை ஆகியோர் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தது.



அதன் பேரில் உதவி பொறியாளர் மாரிமுத்து தளி போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவர்களை கண்காணிக்க போலீஸ் மூலம் ரோந்து பணியை மேற்கொள்ளவும், மேலும் ரோந்து பணிக்கு செல்லும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் அதிகாரிகள் தரப்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...