மனநலத்தை மேம்படுத்த இயற்கையுடன்‌ தொடர்பில்‌ இருங்கள்‌ - உலக மனநல தினத்தை முன்னிட்டு சத்குரு அறிவுரை

உலக மனநல தினத்தையொட்டி, பல்வேறு விதமான மனநல பாதிப்புகளிலிருந்து விடுபடவும்‌, ஆரோக்கியமாக வாழவும்‌ இயற்கையுடன்‌ தொடர்பிலிருப்பது என சத்குரு கூறியுள்ளார்‌.


கோவை: மனநோய்களால்‌ அவதிப்படும்‌ குழந்தைகளை விளையாட்டிலும்‌ இசையிலும்‌ ஈடுபடுத்த வேண்டும்‌ என்று சத்குரு அறிவுரை வழங்கியுள்ளார்.

உலக மனநல தினம்‌ இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில்‌, பல்வேறு விதமான மனநல பாதிப்புகளிலிருந்து விடுபடவும்‌, ஆரோக்கியமாக வாழவும்‌ இயற்கையுடன்‌ தொடர்பிலிருப்பது என சத்குரு கூறியுள்ளார்‌. எளிய முறையில்‌ மனநலனை மேம்படுத்தி கொள்வதற்கு சத்குரு அவர்கள்‌ சில ஆலோசனைகளையும்‌ வழங்கியுள்ளார்‌.

இது தொடர்பாக அவர்‌ கூறுகையில்‌ "இன்றைய உலகில்‌ செயலுக்கும்‌ புத்திக்கும்‌ ஒதுக்கப்பட்டுள்ள சக்தி பெரும்பாலும்‌ பயன்படுத்தப்படாமல்‌ போவதால்‌, எல்லாவிதமான மன நோய்களும்‌ மனச்சோர்வும்‌ ஏற்படுகிறது. எனென்றால்‌ உணர்ச்சியளவில்‌ போதுமான அளவு தங்களை வெளிப்படுத்தாமலும்‌ உடலை வருத்தாமலும்‌ இருந்தால்‌ மனச்சோர்வில்‌ ஆழ்வது இயல்பானது. எனவே, மனநோய்களால்‌ அவதிப்படும்‌ குழந்தைகளை விளையாட்டிலும்‌ இசையிலும்‌ ஈடுபடுத்த வேண்டும்‌.

கணினி, மொபைல்‌ உள்ளிட்ட சாதனங்களால்‌ ஏற்படக்கூடிய எந்திரத்தனமான வாழ்கையில்‌ இருந்து விடுபட்டு இயற்கையுடன்‌ தொடர்பில்‌ இருக்கும்‌ பழக்கத்தை அதிகரித்துக்‌ கொள்ளுங்கள்‌. குறிப்பாக நீர்‌, ஒளி, மண்‌ ஆகியவற்றுடன்‌ தொடர்பில்‌ இருப்பதன்‌ மூலம்‌ உங்களுடைய மனம்‌ மற்றும்‌ உடல்‌ ஆரோக்கியத்தை சுலபமாக மேம்படுத்த முடியும்‌.

நீங்கள்‌ செய்யும்‌ தொழிலுக்கு ஏற்ப உங்கள்‌ உணவு முறையை மாற்றி அமைத்துக்‌ கொள்ளுங்கள்‌. மன ஆற்றலையும்‌ சமநிலையையும்‌ மேம்படுத்தும்‌ உணவை அதிகம்‌ எடுத்துக்‌ கொள்ளுங்கள்‌. உதாரணத்திற்கு, காபி குடிப்பதை குறைத்துக்‌ கொண்டு வெள்ளை பூசணி ஜூஸ்‌, தேன்‌ போன்ற நேர்மறை பிராண சக்தி கொண்ட உணவை அதிகம்‌ எடுத்து கொள்ளுங்கள்‌. பெருங்குடலை சுத்தமாக வைத்திருக்கும்‌ வழிமுறையை பின்பற்றுங்கள்‌" என சத்குரு கூறியுள்ளார்‌.

மேலும்‌, இது தொடர்பாக “X" தளத்தில்‌ அவர்‌ வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்‌ “நீங்கள்‌ உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வுர் தியாக மற்றும்‌ ஆற்றல்‌ ரீதியாக சமநிலையுடன்‌ இருந்தால்‌ உங்கள்‌ உட்சபட்ச திறனுடன்‌ உங்கள்‌ வாழ்கையை நடத்துவீர்கள்‌.

சமநிலை தான்‌ மிக முக்கிய அம்சம்‌. சமநிலையற்ற தன்மை என்பது மோசமான ஆரோக்கியத்தை குறிக்கும்‌. சமநிலை என்பது தான்‌ ஆரோக்கியம்‌. உடல்ரீதியாக, மன ரீ தியாக மற்றும்‌ உணர்வு ரீதியாக நீங்கள்‌ ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும்‌ என்றால்‌, சமநிலை அவசியம்‌.” என கூறியுள்ளார்‌.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...