தாராபுரத்தில் வரும் 29ம் தேதி மனைவி நல வேட்பு விழா - முன்பதிவு செய்ய அழைப்பு

தாராபுரம் மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோவில் மன்ற அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டத்தில் வரும் 29ஆம் தேதி மனைவி நல வேட்பு விழா நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: மனைவி நல வேட்பு விழாவில் 100- க்கும் மேற்பட்ட தம்பதியினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கணவன், மனைவி இருவரும் தம்பதியராகக் கலந்துகொண்டு திருமண நாளை நினைவுப்படுத்தி பேசலாம் என தெரிவிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோவில் மன்ற அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டம் அண்ணா நகரில் உள்ள மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அறக்கட்டளையின் இந்த வருடத்திற்கான முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. அவ்விழாவில் பெண்களின் பெருமையாக மனைவி நல வேட்பு விழா நடத்தப்பட உள்ளது.



விழா வருகின்ற 29-ந்தேதி தாராபுரம்-உடுமலை ரோட்டில் உள்ள அரிமா அரங்கத்தில் நடைபெற உள்ளது. விழாவில் ஆழியார் உலக சமுதாய சேவா சங்கத்தின் விசன் இணை இயக்குனர் பேராசிரியர் அருட்செல்வி மனைவியின் மாண்பு பற்றியும், திருச்சி பேராசிரியர் நீலகண்டன் வாழ்வியலில் வேதாத்திரியம் என்கிற தலைப்பிலும் பேச உள்ளனர்.

மனைவி நல வேட்பு விழாவில் 100-க்கும் மேற்பட்ட தம்பதியினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கணவன், மனைவி இருவரும் தம்பதியராகக் கலந்துகொண்டு திருமண நாளை நினைவில் நிறுத்தி தியாகத்தின் திரு உருவமாம் மனைவியின் மாண்பைப் போற்றும் விழாவாக இந்த விழா அமைய உள்ளது. இதில் கலந்துகொண்டு பயன் பெற முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...