உடுமலை அமராவதி அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

விவசாயிகள் கோரிக்கையை ஏற்று உடுமலை அமராவதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள பொதுப்பணித்துறை கோரிக்கை.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு நெல் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருவதாக விவசாயிகள் தரப்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் இன்று முதல் 15 நாட்களுக்கு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆற்றுபகுதியிலும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாயில் தண்ணீரை திறந்து வைத்தார்.

இதன்மூலம் 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அணிகடவு கிரி, மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி, எலையமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...